Cinema

இயக்குனர் வம்சி அடுத்த திரைப்படம் எடுக்காததற்கு இதுதான் காரணமா!!! கசிந்த தகவல்கள்...

VIJAY, DIRECTOR VAMSI
VIJAY, DIRECTOR VAMSI

இன்றைய காலங்களில் சினிமா என்பது அனைவரும் விரும்பி பார்க்கும் ஒரு தவிர்க்க முடியாத பொழுதுபோக்காகவே வளர்ந்து வருகிறது!! இந்த சமயத்தில் அதில் நடிக்கும் நடிகர்களும் நடிகைகளும் பிரபலமாகிக் கொண்டே இருக்கின்றனர். முந்தைய காலங்களில் எம்ஜிஆர், சிவாஜி உங்கள் ரஜினி, கமல் வரை போன்ற நடிகர்கள் பிரபலமாக இருந்தார்கள். ஆனால் இன்றைய இளைஞர்கள் பெருமளவில் அஜித், விஜய் போன்ற நடிகர்களின் படங்களையே விரும்பிப் பார்க்கின்றனர். இவர்கள் இரண்டு பேருக்கும் என்றுமே ரசிகர் கூட்டம் பெருமளவில் இருந்து கொண்டே தான் இருக்கிறது. விஜய் தமிழ் மற்றும் பிற மொழி படங்களில் அதிக அளவில் நடித்து பெருமளவில் அதிக ரசிகர்களையும் பெற்றுள்ளார். தற்போது முன்னணி நடிகராக இருக்கும் விஜய் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.


மேலும் இவர் நடித்த படங்கள் அதிக அளவில் வெற்றி பெற்று பெருமளவில் பாக்ஸ் ஆபீஸ் நிறைந்த காணப்படும். எனினும் சில சமயங்களில் இவரின் திரைப்படங்கள் மக்களால் அதிக அளவில் வரவேற்கப்படாமலும் போய்விடுகின்றது. அப்படி இவர் நடித்த சுறா, தலைவா மற்றும் பீஸ்ட் போன்ற திரைப்படங்கள் திரையில் வெளியாகியும் மக்கள் பெருமளவில் விரும்பி பார்க்கவில்லை. அந்த வகையில் தளபதி விஜயின்  நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தில்  பாக்ஸ் ஆபிஸ் அவ்வளவு வருமானம் அடையவில்லை. வாரிசு திரைப்படம் பெருமளவில் மக்களால் வரவேற்கப்படாமல் தோல்வியுற்றது. விஜயின் முன் வெளியான ஹிட் மூவிஸ் உடன் வைத்துப் பார்க்கையில் இந்த படம் அவ்வளவு வரவேற்பை பெறவில்லை என்று தெரிகிறது. இந்த வாரிசு திரைப்படத்தை இயக்குனர் வம்சி இயற்றியுள்ளார். 

இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்தக் கதை ஒரு முன்னணி நடிகர் நடிக்கும் கதையாக இல்லாமல் சாதாரணமான ஆரம்ப நடிகர் நடிக்கும் கதையாக இருப்பதால் விஜயின் ரசிகர்கள் எதிர்பார்த்து அளவிற்கு இல்லாமல் போயிருக்கும் என்று இந்தப் படம் தோல்வி அடைந்ததற்கான காரணங்களை தேடும்போது கிடைக்கின்றது. இதைத்தொடர்ந்து இயக்குனர் வம்சி அடுத்து எந்த திரைப்படமும் எடுக்காமல் உள்ளார். இதற்கு காரணம் இந்த வாரிசு திரைப்படத்தின் தோல்விதானா?? என்று கேள்விகள் எழுகின்றது!! இதைத்தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் பல கருத்துக்கள் எழுந்து வருகிறது!!அதாவது வாரிசு திரைப்படம் வெளியாகி ஒரு வருட காலம் ஆன பொழுதும் இயக்குனர் வம்சி அடுத்து எந்த திரைப்படத்திலும் தனது இயக்கத்தை ஆரம்பிக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என்று பல கேள்விகள் எழுந்த வண்ணமே இருக்கிறது!! ஒருவேளை வாரிசு திரைப்படம் பெருமளவில் வெற்றி பெற்று பெரிய பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் பெற்றிருந்தால் இந்நேரம் வம்சி அடுத்த திரைப்படத்தினை எடுத்து இருப்பார் என்ற கருத்துக்களும் எழுந்து வருகிறது! இத்திரைப்படம் ஒரு குடும்ப கதையை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கிறது.

மேலும் தெலுங்கு தமிழ் போன்ற மொழிகளில் இது வெளியிடப்பட்டது. வாரிசு திரைப்படம் வெளியாகும் போது தான் துணிவு திரைப்படமும் வெளியாகி இருந்ததால் இரண்டு படத்திற்கும் போட்டி ஏற்பட்டது. இந்த போட்டியில் துணிவு படமே வெற்றி பெற்றது!! ஆனால் இந்த தோல்வியினை ஏற்றுக் கொள்ளாமல் விஜய் ரசிகர்கள் போராடி வந்தனர், ஆனால் சமீபத்தில் நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த  சித்ரா லட்சுமணன் வாரிசு படத்தின் தோல்வியாலே வம்சி அடுத்த படத்தின் எடுக்க முடியாமல் அடுத்த பட வாய்ப்புகள் கிடைக்காமலும் திணறி வருகிறார் என்பதுதான் உண்மை என்று போட்டு உடைத்துள்ளார் தயாரிப்பாளர் வம்சி ...