Cinema

தன் காதலிக்கு ப்ரபோஸ் செய்த கே பி ஒய் பாலா.... பாலாவின் காதலி யார்?

KPY BALA
KPY BALA

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் மூலம் மீடியா உலகில் அறிமுகமாகி தற்போது சமூக ஆர்வலராக பலரால் அறியப்படுபவர் கே பி ஒய் பாலா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் மீடியாவில் அறிமுகமானார். அந்த நிகழ்ச்சியிலே நல்ல வெற்றியும் கண்டார் இதனால் அதே தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக பணியாற்றினார் அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாகவும் நடித்த பாலா பிறகு சினிமா துறையில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் அங்கு தற்போது பிஸியாக நடித்த வருகிறார் அதே நேரத்தில் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். சினிமா மற்றும் எந்த ஒரு பிரபலத்தின் உதவி இல்லாமல் தனது கடின முயற்சியாலே தற்போது சினிமா துறையில் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருக்கும் பாலா தனது கிடைக்கும் வருமானத்தில் பாதியை தற்போது மற்றவர்களுக்கு வழங்கி கர்ணனாக உலா வந்து கொண்டிருக்கிறார். 


அதாவது ஆரம்பத்தில் மழைபால் கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் சில குழந்தைகளின் மருத்துவச் செலவுகள் படிப்புக்கு வேண்டிய செலவுகள் என தனது பங்கை ஆட்சி வந்த கே பி ஒய் பாலா, சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் பொழுது மக்கள் பாதிப்பில் அடைந்த துன்பத்தை சமாளிக்க முடியாமல் திண்டாட்டிகொண்டிருந்தனர் அப்பொழுது தன்னிடம் இருந்த இரண்டு லட்சம் ரூபாயை நிவாரணமாக வழங்கியதோடு,  அத்தியாவசிய பொருள்கள் சிலவற்றையும் வாங்கி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார். இப்படி தன்னிடம் இருக்கும் பணத்தில் பெரும் பங்கை மக்களுக்கு உதவி செய்வதற்காகவே செலவிட்டு வரும் கே பி ஒய் பாலாவிற்கு சமூக வலைதளம் முழுவதும் பல பாராட்டுகள் குவிந்த வண்ணமே உள்ளது அதிலும் குறிப்பாக சமீபத்தில் அவர் செய்த பல உதவிகளை பார்க்கும் பொழுது பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். அது மட்டும் இன்றி இவருடன் சேர்ந்து தற்போது நடிகர் லாரன்ஸ் பல உதவிகளையும் மேற்கொண்டு வருகிறார். ஒருவர் ஒரு விஷயத்தை செய்கிறார் என்றால் எப்படி அவருக்கு பாராட்டுகள் கிடைக்குமோ அதேபோன்ற விமர்சனங்களும் அவருக்கு கிடைக்கத்தான் செய்யும் அதே மாதிரி பாலாவிற்கு எந்த அளவிற்கு பாராட்டுகள் கிடைக்கிறதோ அதே அளவிற்கு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது பணத்தை எல்லாம் இப்படி செலவழித்து விட்டால் எதிர்காலத்திற்கு என்ன செய்வீர்கள் என்ற பல கேள்விகளும் இன்னமும் சமூக வலைதளங்களில் பாலாவை நோக்கி எழுப்பப்பட்டு கொண்டுதான் உள்ளது.

மேலும் திருமண வயதை எட்டியுள்ள பாலா எப்பொழுது திருமணம் செய்து கொள்வார் என்ற கேள்வியும் தற்போது பாலா செல்லும் இடங்கள் எல்லாம் கேட்கப்பட்டு வந்தது அதற்கு தற்போது ஒரு முடிவு கிடைத்துள்ளது! என்ன முடிவு என்றால்,, விஜய் டிவியில் ஒளிபரப்பாகின்ற முத்தழகு சீரியலில் நடிகையாக நடித்து வரும் ஷோபனாவைத்தான் பாலா காதலித்து வருவதாகவும் தற்போது அவரிடம் தனது காதலை கூறிவிட்டு திருமணத்திற்கான ப்ரொபோசலை முன் வைத்துள்ளார். அதாவது ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலா சோபனாவிடம் திருமணத்திற்கு பிறகு எங்க அம்மா என்ன சொன்னாலும் அதை நான் கேட்க மாட்டேன் அதே மாதிரி நீ எங்க அம்மாவ பத்தி சொன்னாலும் கண்டுக்க மாட்டேன் ரெண்டு பேருக்கும் நடுவுல நடுநிலையா இருப்பேன், உன் கனவுகளுக்கு நான் துணையா இருப்பேன் சம்மதம் சொன்னா நம்முடைய திருமணத்திற்கு இன்விடேஷன் அடிச்சிடலாம்... அதோடு தனியார் சேனல்ல நம்முடைய திருமண வீடியோவை விட்டுட்டா அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை நமக்கு கிடைக்கும் அவங்களே நம்மளோட திருமணத்தை புல் வீடியோ எடுத்து கொடுத்துடுவாங்க என்று புல் ப்ரிபரேஷனோடு தனது ப்ரொபோசலை பாலா கூறிய வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாக வலம் வருகிறது. இது பாலாவின் ரசிகர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது, மேலும் இந்த ப்ரொபஷல் நிஜத்தில் செய்யப்பட்டதா அல்லது நிகழ்ச்சிக்காக செய்யப்பட்டதா என்று கேள்வியும் தற்போது எழுந்துள்ளது!