Cinema

மீண்டும் அதிரடி காட்டிய "கனல் கண்ணன்" .... ஆடி போயிருக்கும் பெரியாரிஸ்ட்கள்..

Stunt master kanal kannan
Stunt master kanal kannan

கனல் கண்ணன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்வார்கள் என எதிர்பார்த்து காத்து இருந்த பெரியாரிஸ்ட்கள் தற்போது மீண்டும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர், முதலுக்கே மோசமாகி விடுமோ என்ற அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கிறது பெரியாரிஸ்ட் தரப்பு,  அப்படி என்னதான் நடந்தது பார்க்கலாம்.


சினிமாவில் அதிரடி சண்டை காட்சிகளுக்கு பெயர் பெற்ற கனல் கண்ணன், இந்து முன்னணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார் அப்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு எதிரே உள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என அவரது பாணியில் குறிப்பிட்டார், இதற்கு பெரியாரிஸ்ட் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

உடனடியாக கனல் கண்ணனை கைது செய்யவேண்டும் என்றெல்லாம் கோஷம் போட்டனர், ஒரு கட்டத்தில் கனல் கண்ணன் வீட்டின் முன்பு மப்டியில் காவல்துறையினர் நின்ற நேரத்தில் கனல் கண்ணனுக்கு ஆதரவாக இந்து அமைப்புகள் களம் இறங்கின, பல்வேறு அரசியல் தலைவர்களும் குரல் கொடுத்தனர்.

இந்த நேரத்தில் கனல் கண்ணன் தலைமறைவாகிவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது, இதை கொண்டு பெரியாரிஸ்ட்கள் பலர் கனல் கண்ணனை கிண்டல் செய்தனர், பெரியார் சிலை அங்கேயேதான் இருக்கு, அதனை விமர்சனம் செய்த கனல் கண்ணனைதான் காணவில்லை என பக்கம் பக்கமாக எழுதினர்.

இந்த சூழலில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கனல் கண்ணன் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார், இதில் தனது பேச்சிற்கு மன்னிப்பு கேட்கும் விதமாக மனுவில் கனல் கண்ணன் குறிப்பிட்டு இருப்பார் என்று பெரியாரிய அமைப்பாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.

ஆனால் நடந்தது வேறு, நான் இந்திய சட்டத்திற்கு எதிராக பேசவில்லை, உண்மையில் கோவில் வாசலில் கடவுளை இழிவுபடுத்தும் விதமாக பெரியார் சிலையை வைத்தது தான் தவறு, பெரியார் சிலையை அங்கு வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, தன் மீது நடவடிக்கை எடுக்க நினைப்பது எப்படி சரி, பெரியார் சிலையின் கீழே இடம்பெற்றுள்ள வாசகங்கள்தான் உண்மையில் இந்திய சட்டத்திற்கு எதிரானது என ஆணி தரமாக கனல் கண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

இதனை பெரியாரிஸ்ட் தரப்பு எதிர்பார்க்கவில்லை, கனல் கண்ணன் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனுவில் பெரியார் சிலையின் கீழ் இடம்பெற்றுள்ள வாசகங்கள் இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிரானது என குறிப்பிட்டு இருப்பது பெரும் விவாதத்தை உண்டாக்கி இருக்கிறது,  கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் வைக்கலாம் என எதிர்பார்த்து இருந்த பலர் இப்போது கடும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

நாளை ஏதேனும் ஒருவர் நீதிமன்றம் சென்று பெரியார் சிலையை அகற்றவேண்டும் அதில் இடம்பெற்றுள்ள வாசகங்களை நீக்க வேண்டும் என குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்தால் என்ன ஆகும் என கதி கலங்கி இருக்கின்றனராம்.தீவிர பெரியார் ஆதரவாளர்கள். மொத்தத்தில் புலி வாலை பிடித்த கதையாக கனல் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க நினைத்து பெரியார் சிலையில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் குறித்து நீதி மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று முதலுக்கே மோசம் செய்துள்ளது பெரியாரிஸ்ட் தரப்பு.

கனல் கண்ணன் சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் மாஸ்டர் என்பதை நிரூபித்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.