
பிக்பாஸ் சீசன் 7 முடிஞ்சாலும் அதில் தொடங்கிய சர்ச்சை மட்டும் இன்னும் ஓய்ந்தபாடு இல்லை. தற்போது நிகழ்ச்சி முடிந்த பின்னர் இன்னும் வேட்டை அதிகமாக இருக்கும் என ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கின்றனர். அதாவது போட்டி முடிந்ததும் உள்ளே அன்பவிச்ச சக போட்டியாளர்கள் அவர்களை வெளியில் வந்து தான் பழிவாங்குவார்கள். அப்படி தான் மாயாவை சீண்டியுள்ளார் சக போட்டியாளரான பிரதீப் ஆண்டனி.
தமிழில் பிக்பாஸ் சீசன் 7 தொடங்கியதில் இருந்து பிரதீப் ஆண்டனிக்கு தான் நிறைய சப்போர்ட் இருந்தது. நிகழ்ச்சியை சரியாக கணித்து ஆடினார். கிட்டத்தட்ட அவருக்கு ரசிகர்கள் அதிகமாகி கொண்டே சென்றனர். இது மாயாவுக்கு பெரிய பிரச்னையாக இருந்து இருக்கலாம். முதல் நாளே அவர் தான் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். இது அறிந்த மாயா பிரதீப் மீது கோபத்தை வெளிப்படுத்தினார். முதல் சில வாரத்தில் பிரதீப்புடன் சின்ன பிக்பாஸ் வீட்டில் இருக்க மாட்டேன் என்றார். ஆனால் அவரின் சப்போர்ட்டை அறிந்த பின்னர் அவரை அண்ணன் எனக் கூறி கையில் முத்தம் கொடுத்து தன்னுடைய இமேஜை காப்பாற்றி கொண்டார். கிட்டத்தட்ட ஒரு டாஸ்கில் நான் வெற்றி பெற்றால் 50 லட்சத்தினை பிரதீப்புக்கே எனவும் பேசி இருந்தார்.
ஆனால் திடீரென யாருமே எதிர்பார்க்காமல் ஒரு வீக் எண்ட் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் சிலர் உரிமை குரல் தூக்கி பிரதீப் மீது குற்ற பத்திரிக்கை வாசித்தனர். இதில் விளக்கம் அளிக்க பிரதீப் ஆண்டனிக்கு இடம் கொடுக்கப்படாமல் இருந்தது. போட்டியாளர்களை ஒன்றின் பின் ஒருவராக உள்ளே அழைத்தார் கமல். ஒற்றை விரலை காட்டி தொட சொல்வது போல ரெட் கார்டை கொடுத்து உண்டா இல்லையா எனக் கேட்டார். அர்ச்சனா, விசித்ரா, தினேஷ் உள்ளிட்ட சிலரை தவிர மற்ற எல்லாருமே ரெட் கார்டை கொடுக்க பிரதீப் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது பெரிய சர்ச்சையாகியது. அதாவது பெண்களுக்கு மரியாதை கொடுக்காமல் பேசியதாக அவர் மீது விமர்சனம் வந்த நிலையில் தொகுப்பாளர் கமல்ஹாசன் அவரை அழைத்து விசாரிக்காமல் ரெட் கார்டு கொடுத்துவிட்டார்.
அதன் பின்னர் வெளியில் வந்த பிரதீப் தொடர்ந்து தன்னுடைய ட்வீட் மூலம் நச்சென சிலரை கேள்வி கேட்பதில் தவறவே இல்லை. கமல் பிறந்தநாள் வாழ்த்தில் கூட தீர விசாரிப்பதே மெய் என்ற பிரதீப்பின் ஹாஸ்டேக் வைரல் ஆக அதற்கு கமலும் நிக்ழ்ச்சியில் தீர கொடுத்தது தான் என பதிலடியும் கொடுத்து இருந்தார். தற்போது நிகழ்ச்சி முடிந்து இருக்கும் நிலையில், பிரதீப் ஆண்டனி ஹாய் மாயா, லைப்லாம் எப்படி போகுது? நீ நல்லா இருப்பனு தெரியும். என்னுடைய நட்பின் மதிப்பு 50 லட்சம். நான் அவ்வளோலாம் வொர்த் இல்லனு நீ நினைச்சா. நான் புரிஞ்சிக்கிறேன். உன்னோட விளையாண்டது நல்லா இருந்துச்சு. செக் மேட் என ட்வீட்டி இருக்கிறார்.
இதில் தங்களது பிபி வீடியோவுடன் ராக்ஸ்டார் என்ற ஒரு பாட்டையும் இணைத்து இருக்கிறார். கண்டிப்பாக இனி அடுத்தடுத்த ட்வீட்களில் நிறைய வெடி வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாயாவின் கூட்டம் என்ன சொல்லும் என ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கமல்ஹாசன் மாயாவிற்காக பதிலடி கொடுப்பார் என கூறப்படுகிறது. இவர்களை போல இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் இணையத்தில் சர்ச்சை ஏற்படுத்துவார் என தெரிகிறது. முன்னதாக மாயா தான் வெற்றி பெறுவார் அவருக்கு கமல்ஹாசன் உறுதுணையாக இருக்கிறார் என்று பேச்சு வந்தது, ஆனால், கடைசியில் மொத்தமாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.