Cinema

சீமான் ஓபன் டால்க் இப்ப கூட பாருங்க சூர்யா, விஜய்க்கு பிரச்சனை நா தான் குறுக்க போயி சண்டை போட்டேன் !

seeman vijay and surya
seeman vijay and surya

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.


தமிழக அரசியல் நிலவரம் குறித்து தம்பி தமிழரசன் NEWS18 தமிழ்நாடு சேனலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்திற்கு சென்று நேர்காணல் செய்து இருந்தார், இதில் தம்பி தமிழரசன் எழுப்பிய கேள்விக்கு சீமான் பதில் அளித்தார்.

அப்போது முல்லை பெரியார் அணை குறித்து பேச தமிழகத்தில் நடிகர்கள் இல்லை என பேசினீர்கள் அது ஏன் என கேட்டார், அதற்கு பதில் அளித்த சீமான், ஆமாம் உண்மைதான் வன பாதுகாப்பு குறித்து தம்பி கார்த்தி மட்டும்தான் பேசுறாரு கல்வி குறித்து சூர்யா மட்டும்தான் பேசுறாரு அப்போது இருவருக்கும் எதிர்ப்பு வந்தபோது நான்தான் குறுக்க புகுந்து மல்லு கட்டினேன்.

கேரளாவில் நடிகர்கள் இடையே ஒரு ஒற்றுமை இருக்கிறது ஆனால் இங்க இல்லை, ஜெய்பீம் படம் பார்த்தேன் என் தம்பி சூர்யா தைரியமா எடுத்துருக்கான்,  ஆனால் இது குறித்து விஜய் பேச பயப்புடுவான் அவனோட "உயரம்" அவனுக்கே தெரியாது, ஏதாவது பேசிடுவான் அப்புறம் போயிருவான், நீ யாருக்கு பயப்புடுற உன் நிலம் உன் நாடு.. அவனுக்கே கார் வாங்கியத்தில் பிரச்சனை அவன் பேசல நான் தான் போயி சண்டை போட்டேன்.

எந்த விஷயத்திற்கும் பயம் கொள்ளக்கூடாது என சீமான் பேசியுள்ளார் சூர்யாவிற்கு கல்வி தொடர்பான பேச்சின் போதும், விஜய் சொகுசு கார் வாங்கிய விவாகரத்திலும் நா தான் சண்டை போட்டேன் என சீமான் பேசியதும், விஜய் பயப்புடுவான் என அவன் இவன் என பேசியதும் விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.