Cinema

சிவகார்த்திகேயன் குறித்த சர்ச்சைக்கு பிறகு நீண்ட நாள் கழித்து மனம் திறந்த இமான் மனைவி!

sivakarthikeyan, d iman
sivakarthikeyan, d iman

திரை உலகில் இசை கலைஞர்கள் மற்றும் நடிகர்கள், ஒரு குறிப்பிட்ட நடிகை நடிகர்கள், இயக்குனர் இசையமைப்பாளர்கள் சேர்ந்தால் அந்த படம் ஹிட் என்ற அளவிற்கு ஒரு குறிப்பிட்ட அவர்களின் காம்போ மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வந்தது இதில் நடிகர் சிவகார்த்திகேயனும் இசையமைப்பாளர் இமான் அவர்களின் காம்போ அதிக ரசிகர்களை கொண்டிருந்தது. விசில் படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமான ஈமான் சிவகார்த்திகேயனின் மனம் கொத்தி பறவை படத்திலிருந்து கடைசியாக அவர் குடும்பப் பாங்கில் நடித்த எங்க வீட்டு பிள்ளை திரைப்படம் வரை டி இமான் இசை அமைத்திருந்தார்.  நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டி இமான் இசை அமைத்த அனைத்து பாடல்களுமே செம ஹிட் ஆனது, இதனால் ஏதாவது ஒரு படத்தில் இருவர்களின் காம்போ இருக்கிறது என்றால் அந்த படம் நிச்சயம் கெட்டு தான் என்ற அளவிற்கு அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இப்படி பேசப்பட்டதில் யாரது கண் இவர்கள் மீது பட்டதோ என்று தெரியவில்லை கடந்த சில நாட்களாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் எந்த ஒரு திரைப்படத்திலும் இமான் இசையமைக்காமல் இருந்து வந்தார்.


இதற்கு இடையில் தமிழ் சினிமாவிலும் சற்று அமைதி காத்து வந்த இமான் திடீரென்று தனது விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டார் அதோடு விவாகரத்தான அடுத்த சில நாட்களுக்குள்ளே இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார்.  இந்த நிலையில் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த இசையமைப்பாளர் இமான் நடிகர் சிவகார்த்திகேயன் குறிப்பு ஒரு பரபரப்பான தகவலை கூறினார். அதாவது இனிமேல் சிவகார்த்திகேயனுடன் எந்த ஒரு படத்திலும் இணைய போவதில்லை என்றும் ஏனென்றால் அவ்வளவு பெரிய துரோகத்தை சிவகார்த்திகேயன் எனக்கு செய்து விட்டார் என்றும் அது குறித்து குழந்தைகளின் எதிர்காலம் கருத்தில் கொண்டு நான் பொதுவெளியில் கூறப்போவதில்லை என்றும் இமான் கூறியது சினிமா வட்டாரங்களில் பல வாரு பேசப்பட்டது. அதிலும் குறிப்பாக இமானின் விவாகரத்து நிகழ்வும் இமான் சிவகார்த்திகேயன் குறித்து பேசிய கருத்துக்களும் ஒரே நேரத்தில் வைரலானதால் இமானின் விவாகாரத்திற்கு சிவகார்த்திகேயன் தான் காரணமா என்ற வகையில் சினிமா வட்டாரம் முழுவதும் கிசுகிசுக்கப்பட்டது. அந்த நிலையில் இமானின் முன்னாள் மனைவி இமானை குறித்து விமர்சிக்கும் வகையிலும் சிவகார்த்திகேயனுக்கும் எங்களது விவாகரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறினார்.

இந்த வீடியோவும் வைரலான நிலையில் இமானின் விவாகரத்து குறித்த சர்ச்சையும் சிவகார்த்திகேயன் குறித்து இமான் பேசிய சர்ச்சையும் இதுவரை தீராத ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பெருமளவில் பொது மேடை மற்றும் பொதுவெளியில் பேசாமல் இருந்த இமானின் இரண்டாவது மனைவி தற்பொழுது இமான் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதில் கலந்து கொண்டு பேசிய இமான் மனைவி, நான் இதுபோன்று மேடையில் பேசியதில்லை என் கணவரை பற்றி கூற வேண்டும் என்றால், இவரைப் போன்ற ஒரு பாசனத்தான மற்றவர்கள் எதிர்பார்க்கும் மற்றும் மற்றவர்கள் கேட்கும் வகையில் அவற்றை செய்து வருகிறார் இது போன்ற குவாலிட்டியில் இதுவரை நான் யாரையும் பார்த்ததில்லை! நல்ல ஒரு அழகான மனிதர், அவரை இதுவரை நான் கோபப்பட்டு பார்த்ததே இல்லை! மற்றும் அருமையான தந்தையாகவும் இருக்கிறார் அன்பானவராகவும் இருக்கிறார் இந்த அன்பு என்பது அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி தம்மை சார்ந்த அனைவருக்கும் வழங்குகிறார் என்று தன் கணவனை குறித்து அவரது மனைவி புகழ்ந்து பேசி இருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.