Cinema

நடிகர் சூர்யா மீது வலுக்கும் கண்டனம்!..

Suriya, Ameer
Suriya, Ameer

அமீர் இயக்கிய பருத்திவீரன் பட விவகாரம் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் பரபரப்பை கிளப்பியுள்ளது. சமீப மாதமாக அமீர்க்கு ஆதரவாக ஊடகத்தளத்தில் நடிகர்கள் ஆதரவு கொடுத்து வந்தனர். பருத்திவீரன் படத்தில் இய்குனார் அமீர் செல்வு செய்த குறிப்பிட்ட தொகை  சிவக்குமார் குடும்பமோ இல்லை அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவோ அவருக்க கொடுக்கவில்லை என்பதுதான் அமீரின் புகார். இதனை இயக்குனர் அமீர் தொடர்ந்து பொதுவெளியில் சொன்ன போது சிவகுமார் குடும்பம் து ஒரு பெரிய விஷயமாக எடுத்து கொள்ளவில்லை.


நடிகர் கார்த்திக்கு முதல் படமாக பருத்திவீரன் படம் அமைந்தது, இதில் அமீர் கார்த்திகை வைத்து நடிப்பில் செதுக்கியிருப்பார் என்று தான் இன்றுவரை பேசப்படுகிறது. முன்னதாக சூர்யாவை வைத்து மௌனம் பேசியதே படத்தில் சூர்யாவுக்கு ஒரு பெரிய வெற்றியை ஏற்படுத்திக்கொடுத்தார். பருத்திவீரன் படம் சுமார் 16 ஆண்டுக்களுக்கு முன்னதாக வெளியானது இந்த படம் தொடங்கியபோது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பாதியிலேயே விட்டுவிட்டு போன நிலையில் மீதி படத்தை தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி எடுத்தார் அமீர். சுமார் 1.65 கோடியை கடனாக பெற்று அந்த படத்தை எடுத்து முடித்து பெரிய அளவில் வெற்றியை ஏற்படுத்தி கொடுத்தது. 

இந்த தொகை சம்பந்தமாக ஞானவேல் ராஜா அப்போது இருந்த நடிகர் சங்கத்திடம் கேட்டு படத்தை தன் பெயருக்கு எழுதி வாங்கினார். அந்த ஒப்பந்தத்தின் போது, படம் ஓடினால் அமீர் செலவு செய்த பணத்தை கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். ஆனால், படம் வெளியாகியும் அந்த தொகையை ஞானவேல் ராஜா இதுநாள் வரை அமீருக்கு திரும்ப கொடுக்கவில்லை என பேசப்படுகிறது. இந்த பணத்துக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கடந்த 17 வருடங்களாக அலைந்து வருகிறார் அமீர். சிவகுமார் குடும்பம் தற்போது சினிமாவில் முன்னணி நடிகர்கள், நடிகையாக இருக்கின்றனர். அவர்கள் நினைத்தால் அந்த தொகை ஒன்றும் பெரியதில்லை எதற்காக வேடிக்கை பார்த்து வருகிறார் என கேவி எழுந்தது. சூர்யா தற்போது சிறுத்தை சிவா உடன் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். 

முன்னதாக இயக்குனர் பாலாவுடன் இணைந்து வணங்கான் படத்தில் நடித்து வந்தார். அப்போது அந்த படத்தின் போஸ்டர் வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதில் சூர்யா பாலா இடையே ஏற்பட்ட சிறு பிரச்னை காரணமாக அந்த படத்தின் பாதியில் இருந்து விலகினார். வணங்கான் படம் மூலம் சூர்யாவுக்கு 4 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 4 கோடியை கண்டுகொள்ளாத சூர்யா அமீருக்கு பணம் கொடுத்திருக்கலாமே என்பதுதான் பலரின் கேள்வியும். விஷயம் தெரிந்த சினிமா பத்திரிக்கையாளர்கள் சொல்வது என்னவெனில் ‘சூர்யாவுக்கு பணம் பிரச்சனை இல்லை. ஈகோதான் பிரச்சனை. அமீர் மீது ஏதோ மனக்கசப்பில் சிவக்குமார் குடும்பம் இருக்கிறார்கள். அதனால் இப்படி நடந்து கொள்கிறார்கள்’ என சொல்கிறார்கள்.

ஒருபக்கம் சிவகுமார் குடும்பம் மீது வேண்டுமென்றே அமீர் குற்றம் சுமத்துகிறார் என பேசப்பட்டது. பருத்திவீரன் படத்தின் தணிக்கை சான்றிதழை வலைப்பேச்சு பிஸ்மி வெளியிட்டுள்ளார். அதில், தயாரிப்பாளர் பெயரில் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் பெயர் இல்லை. அதற்குப் பதிலாக அமீரின் டீம்வொர்க் புரடக்‌ஷன் ஹவுஸ் பெயர் தான் உள்ளது. என முற்று புள்ளி வைக்கப்பட்டது.  அதன் பின் சமூக தளத்தில் அமீர் பேசியது வைரலாக தயாரிப்பாளர் ஞானவேல் விளக்கம் கொடுத்திருந்தார் அதுவும் விமர்சனமாக எழுந்தது. இதுநாள் வரை அம்மேற்கு என்ன தான் பிரச்சனை என சிவியாகுமார் குடும்பம் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பதுதான் குழப்பமாக உள்ளது.