Honorable writers

சவுக்கு சங்கர்க்கு இடியாய் விழுந்த செய்தி..! கரூரில் ஏற்பட்ட சம்பவம்...?

savukku shankar
savukku shankar

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. வழக்கறிஞரான இவர் சவுக்கு சங்கர் ஆதரவாளர். சவுக்கு சங்கர் மீடியாவை சேர்ந்த சூர்யா மற்றும் பிரதீப் ஆகிய இருவரும் ராஜாவை சந்திப்பதற்காக வேலாயுதம்பாளையம் வந்துள்ளனர். மூன்று பேரும் பாலத்துரை பகுதியில் உள்ள பேக்கரியில் வெளியே நின்று டீ குடித்துக் கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத 5 பேர் மூவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் ராஜாவுக்கு தாடை மற்றும் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்துள்ளது.


சூர்யா மற்றும் பிரதீப் ஆகிய இருவரும் தாக்குதல் நடத்தியவர்களை திருப்பித் தாக்க, ஐந்து பேரும் அவர்கள் வந்த காரில் ஏறி அங்கிருந்து வேகமாக புறப்பட்டுள்ளனர். அவர்களை துரத்திக் கொண்டு சென்ற இருவரும் தப்பியோடிய மர்ம நபர்கள் மீது பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றதாக கூறப்படுகிறது. பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட ராஜா வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ராஜா அளித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீசார் தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சவுக்கு சங்கர் ஆதரவாளர்கள் கரூர் பகுதியில் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.