Cinema

மாப்பிள்ளை கிடைக்கவில்லை வேதனையில் விஜே பார்வதி...

VJ PARVATHY
VJ PARVATHY

Youtube சேனல்களில் ஆங்கர் ஆக பணியாற்றி அதன் மூலம் சினிமா துறையிலும் வாய்ப்பை பெற்று குடும்பத்தில் முதல் தலைமுறையினர் தற்போது அதிகமாக சினிமாவில் தோன்றுவதை பார்க்க முடிகிறது மேலும் பல youtube சேனல்களில் தொகுப்பாளராகவும் பார்க்க முடிகிறது. அந்த வகையில் மதுரையைச் சேர்ந்த பார்வதி என்ற ரேடியோ ஜாக்கி கலாட்டா தமிழ் என்ற பிரபல தனியார் youtube சேனலில் தொகுப்பாளினியாக சமூக வலைதளங்களில் பரவலாக அறியப்பட்டவர். இவர் தொகுப்பாளராக இருந்து பல இடங்களுக்கு சென்று அங்கு இருக்கும் மக்களிடம் நேரடியாகவே பேட்டி எடுத்து அவர்களின் அனுபவத்தையும் அவர்கள் கூறும் பதிலையும் பலவாறு கலாய்த்து சில ரசிகர்களை தனக்கு சேர்த்து வைத்து வந்தார் மேலும் இவர் பேட்டி எடுக்கும் பொழுது கேட்கப்படும் கேள்விகள் அனைத்துமே சிரிக்க வைக்கும் வகையிலும் யாருமே இதுவரை இதற்கெல்லாம் பதில் கூறியது இல்லை என்ற வகையிலும் இருக்கும் அப்படிப்பட்ட கேள்விகளை தேர்ந்தெடுத்து அதற்கு அவர் கூறும் பதிலை கேட்கும் போது என்னடா இது என்று பலரும் தலையில் கை வைத்து நொந்து கொள்வார்கள் அப்படிப்பட்ட பதிலை அவர் கொடுத்து சிலரை ஆச்சிரியத்திலும் பலரை கடுப்பிலும் ஆழ்த்தியுள்ளார். 


ஆரம்பத்தில் இருந்தே சினிமா மற்றும் தொகுப்பாளர் ஆகவேண்டும் என்ற கனவில் பத்திரிகை மற்றும் தொடர்பியலிலில் முதுகலை பட்டம் பெற்ற பார்வதி தொடக்கத்தில் விஜேவாக தனது பணியை தொடங்கி பிறகு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார் அதாவது நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார் பார்வதி, இதைத்தவிர குக் வித் கோமாளி கோவில் இரண்டாவது சீசனில் கோமாளியாகவும் இவர் என்றி கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஹிப் ஹாப் தமிழா, மாதுரி ஜெயின் மற்றும் சில நடிகர்கள் நடித்த சிவகுமாரின் சபதம் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார். அதோடு கருங்காப்பியம் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.  இதற்கிடையில் பயணம் மற்றும் ஓவியத்தை காதலிக்கும் இவர் எதற்கெடுத்தாலும் ஊர் சுற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 

அப்படி இவர் பெரும்பாலான நேரங்களில் தான் விருப்பப்படும் இடத்திற்கு சென்று தனது பயணத்தை அனுபவித்து வரும் பார்வதி அங்கு எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார் அப்படி அவர் வெளியிடும் சில புகைப்படங்கள் கவர்ச்சிகரமானதாகவும் இருப்பதால் இவருக்கு இளைஞர்களின் பாலோவர்ர்கள் அதிகமாகவும் இருக்கிறது. அதே சமயத்தில் விமர்சனங்களும் இவரை தேடி குவிந்து கொண்டே வருகிறது. ஏனென்றால் இவர் ஆர் ஜே வாக இருந்த பொழுது பலரும் கேட்பதற்கு கூச்சப்படும் பல கேள்விகளை வெட்ட வெளிச்சம் போட்டு மக்களிடம் கேட்டு அவர்களிடமிருந்து எப்படியாவது பதிலை வாங்கி விடுவார். அதோடு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற சர்வைவா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பல டாஸ்கலை அசால்ட்டாக செய்து முடித்தும் மக்களை தன் பக்கம் திருப்பினார். 

இருப்பினும் சோசியல் மீடியாவில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருக்கின்ற பார்வதி பல நேரங்களில் ஷார்ட் கோன் போட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் இவரை பலர் குட்டி மியாகலிபா என்று அழைப்பதுண்டு, அதோடு பலர் இவருக்கு சமூக வலைதளத்தில் இவரது புகைப்படத்திற்கு ஆபாசமான கருத்துக்களையும் கமெண்ட்களை பதிந்து விட்டு வருவார்கள் அதற்கு பதிலடியையும் பார்வதி அவ்வப்போது கொடுத்து வந்திருக்கிறார் இந்த நிலையில், நான் மதுரை பொண்ணு எனக்கு 27 வயசு ஆகுது நான் பண்ற ஷோ எல்லாத்தையும் என்னோட உறவினர்கள் பார்த்துட்டு ஏன் என்ன இப்படி எல்லாம் இவ பேசிக்கிட்டு இருக்கா இப்படி பேசினா எப்படி மாப்பிள்ளை கிடைக்கும்னு சொல்றாங்க, அதனால இன்னமும் எனக்கு மாப்பிள்ளை கிடைக்கவே இல்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார் இதற்கு பல நெடிசன்கள் இப்படியெல்லாம் பேசினா அப்புறம் எப்படி உனக்கு மாப்பிள்ளை கிடைக்கும்... ஆரம்பத்துல நீ கேட்ட கேள்வி எல்லாம் அப்படிமா என்று பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.