Cinema

தடுமாறிய விஜய்...! தாங்கிப்பிடித்த ரசிகர்கள்..! டென்ஷனான புஸ்ஸி ஆனந்த்!

Vijay
Vijay

நடிகர் விஜய் அரசியலில் தீவிரம் காட்டி வரும் நிலையில், பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு உதவி செய்து வருகிறார். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் இறங்குவாரா அல்லது கூட்டணியில் சேர்நது அரசியலை சந்திக்க உள்ளாரா என்பது குறித்து எந்த வித தகவலும் உறுதி பட வெளியாகவில்லை. அரசியலுக்கு வரும் நபர் எதற்காக மக்களை சந்திக்காமல் இருக்கிறார் விவசாயி மீது குண்டாஸ் பாய்ந்த போதும் மவுனம் காத்து வந்த விஜி தற்போது பொது சேவை செய்வதில் மும்முரம் காட்டியுள்ளார்.


சென்னையில் இந்த மதம் தொடக்கத்தில் மிக்ஜாம் புயல் ஏற்பட்டு மக்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் நீரில் அடித்து செல்லப்பட்டது. அப்போது விஜய் படத்திற்காக வெளிநாடுகளில் பிசியாக இருந்தார். இதனால் சென்னை மக்களுக்கு உதவி செய்யாமல் இருந்ததால் அவர் மீது விமர்சனம் கடுமையாக எழுந்தது. தொடர்ந்து, படம் தான் முக்கியமா தனக்கது மன்ற நிர்வாகிகள் உதவி என்ற பெயரில் புகைப்படத்தை வைத்து கொண்டு விளமபரம் தேடுகிறார்கள் என் விமர்சனம் முன் வைக்கப்பட்டது. இதனையடுத்து சென்னையை போலவே தென் மாவட்டத்தில் கனமழை பொலிந்து முழுவதுமாக மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கியது.

இந்நிலையில் சென்னையின் போது மன்ற நிர்வாகிகளுக்கு தொலைபேசி மூலம் அழைத்து உதவி செய்ய கூறினார். அதேபோல் தென் மாவட்டத்தில் உள்ள மன்ற நிர்வாகிகளுக்கும் உதவி செய்ய போன் மூலம் தொடர்பு கொண்டார். தற்போது மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் நெல்லை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்திட இன்று நெல்லையில் கேடிசி நகரில் உள்ள மாதா மாளிகைகுக்கு வருகை தந்த விஜய் 1500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகிறார். இதில் பாதிக்கப்பட்ட மங்கல அரசி, காய் கறி உள்ளிட்ட பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகிறார்.

மாதா மாளிகைக்கு உள்ளே வரும்போது ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது அப்போது விஜய் மட்டும் உள்ளே அனுமதிக்க ரசிகர் ஒருவர் முயன்றார். விஜய் உள்ளே வந்துவிட்டார் என நினைத்து கதவை மூட விஜய் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை ரசிகர் தாங்கி பிடித்தார். உடனே புஸ்ஸி ஆனந்த் அந்த ரசிகரை போட்டு அடித்துள்ளார். இது அங்கு இருந்த மக்களிடத்தில் கண்கலங்க செய்துள்ளது. நேற்று  இரவு தான் விஜய் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது அங்கு அவர் மீது ரசிகர் ஒருவர் செருப்பை தூக்கி விஜய் மீது எறிந்துள்ளனர். தளபதி அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற விஜய் தற்போது நெல்லையிலும் தடுக்கி விழுந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியலுக்கு வருவது சும்மா இல்லை பல சறுக்கலை சந்திக்க வேண்டும் என நெட்டிசன்கள் இணையத்தில் பேசி வருகின்றனர்.