Cinema

கீர்த்தி சுரேஷை பொதுவெளியில் ஜெயம் ரவி செய்த காரியம்..

jayam ravi, keerthi suresh
jayam ravi, keerthi suresh

ஃபேஷன் டிசைனிங் படித்து பிறகு திரை உலகம் பக்கம் திரும்பிய கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமாகி பிறகு கீதாஞ்சலி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி ரெமோ, ரஜினிமுருகன் ஆகிய படங்கள் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் நடிகையர் திலகத்தின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்ட மகாநதியில் நடிகையர் திலகமாகவே நடித்து சிறந்த நடிகைகான தேசிய விருதையும் பெற்ற கீர்த்தி சுரேஷ் சூர்யா விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார். தற்பொழுது தெலுங்கு, மலையாளம், தமிழ் என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்த வரும் கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்த படங்களாக ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா என இன்னும் பல படங்கள் வரிசையாக வெளியாகியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ரிவால்வர் ரீட்டாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியான பொழுதே வைரலானது.


இதனை அடுத்து ஹிந்தியிலும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது அதாவது தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ரீமேக்கை இயக்குனர் அட்லி ஹிந்தியில் எடுக்க உள்ளதாகவும் அதில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பட்டியலில் கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கிய இடத்தை பெற்று வரும் நிலையில் இவர் குறித்த செய்திகள் மற்றும் புகைப்படங்கள் என அனைத்துமே சமூக வலைதளத்தில் எப்பொழுதுமே வைரலாகிக் கொண்டிருக்கும் சில நேரங்களில் இவரது போட்டோ சூட்டுகள் சமூக வலைதளத்தில் வைரலாகும் அதேபோன்று கீர்த்தி சுரேஷ் காதல் வயப்பட்டு விட்டாரா? காதலிக்கிறாரா? யாரேனும் டேட்டிங் செய்கிறாரா?  இவரை டேட்டிங் செய்கிறாரா? விரைவில் திருமணமா? என்ற பல கேள்விகள் முன்வைக்கப்பட்டு அதுவும் சமூக வலைகளும் முழுவதும் வைரலாகும் சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் கலந்து கொண்டான் கீர்த்தி சுரேஷ்  திரை உலகிற்குள் வருவதற்கு முன்பாக தனது தோழியுடன் சாலையில் இரவு நேரத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது குடிகாரர் ஒருவர் தன்னை அடித்து விட்டு ஓடியதாகவும் அதற்கு பிறகு அந்த நபரை பிடித்து  அருகில் இருந்து காவல் நிலையத்திடம் ஒப்படைத்து சென்றதாகவும் கூறினார்.

இந்த விஷயம் சமூக வலைதளம் முழுவதும் வைரலானது இதனை அடுத்து பாலிவுட் நடிகரான ஷாருக்கானுடன் கீர்த்தி சுரேஷ் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படமும் படு வைரலானது. இந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி, அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள சைரன் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தை அந்தோணி பாக்யராஜ் இயக்கி ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார், வருகின்ற 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் நீ படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் இறங்கியுள்ளனர் இதனால் பல youtube சேனல்கள் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களில் பேட்டி அளித்து வரும் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் குறித்த வீடியோக்களே தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக உலா வருகிறது. 

இந்த நிலையில் ஒரு பேட்டியில் நடிகை கீர்த்தி சுரேஷ் போன்று ஜெயம் ரவி நடித்த வீடியோ மற்ற பேட்டி வீடியோக்களை காட்டிலும் அதிகமாக பகிரப்படுகிறது. அதாவது அந்த வீடியோவில் நடிகர் ஜெயம் ரவி இயக்குனர் என்ன கூறுகிறாரோ அதைத்தான் நான் செய்வேன் எனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் நல்லா பண்ணனும்னு அந்த அகங்காரம் அதர்ப்சனம், அமர்க்களம் இதெல்லாம் இல்லாம இருக்கணும் என்பது பிடிக்கும், அப்படி எனக்கு மீறியும் ஆஸ்கார் கிடைக்கணும்னா கிடைக்கட்டும் ஆல்ரெடி நேஷனல் அவார்ட் வாங்கியாச்சு இனி அடுத்து ஆஸ்கார் கிடைக்கணும்னு நினைக்கிறதுல  தவறு இல்லையே! என்று கீர்த்தி சுரேஷ் போன்று அவர் பேச அவருக்கு அருகில் இருந்த கீர்த்தி சுரேஷ் சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.