Cinema

என்ன சத்யராஜ் "இப்படி சிக்கிடீங்க" வெளியான புகைப்படம் வச்சு செய்யும் இராம. ரவிக்குமார் !

sathiyaraj and Rama. ravikumar
sathiyaraj and Rama. ravikumar

நாத்திகரான நடிகர் சத்யராஜ் பல மேடைகளில் தன்னை நாத்திகவாதியாக அடையாள படுத்தி கொள்ள கூடியவர் அதிலும் பெரியார் வாரிசாக தன்னை அறிவித்து கொண்டு பல குட்டி கதைகளை சொல்லி நாத்திக புகழ் பாடி இருக்கிறார்.. அடிபட்ட மனிதனை காப்பாற்று என்று வேண்டுவதை காட்டிலும் ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனையில் சேர்க்கும் ஓவ்வொருவரும் நாத்திகவாதி என டயலாக் பேசியிருப்பவர் சத்தியராஜ்.


ஆனால் இன்று தன் குடும்பம் என்று வரும்போது சிக்கி இருக்கிறார் சத்யராஜ், வைரலான புகைப்படத்தை பகிர்ந்து கேள்வி எழுப்பி இருக்கிறார் இந்து தமிழர்கட்சியின் நிறுவனர் இராம ரவிக்குமார் அவர்கள், இது குறித்து அவர் தெரிவித்தது பின்வருமாறு :- திரைப்பட நடிகர் திரு சத்யராஜ் அவர்களின் சகோதரி சமீபத்தில் காலமானார் வருந்தத்தக்க நிகழ்வு அவருடைய அஸ்தியை காவிரியில் கரைத்து,நீத்தார் கடன் நிறைவு செய்தல் நிகழ்வில் திரு சத்யராஜ் அவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்.

மேடைகளில் நாத்திக வாதம் பேசுவது இந்து நம்பிக்கைகளை,சடங்கு சம்பிரதாயங்களைகொச்சைப்படுத்துது, ஈவேரா புகழ் பாடுவது....என்று எத்தனையோ விஷயங்களை திரு சத்யராஜ் செய்திருக்கிறார். ஆனாலும் கூட இந்து நம்பிக்கை சார்ந்த விஷயங்களுக்கு உடன் சென்று இருக்கிறார் என்ற செய்தியை பதிவு செய்துகொள்கிறேன்.


இதேபோல் கடந்த ஆண்டு விசிக தலைவர் திருமாவளவன் அவர்களின் சகோதரி காலமானார். மேடைகளில் சனாதனத்தை வேரறுப்போம் என்று சொல்லும் அவர் தனது வீட்டில் 16ஆம் நாள் காரியங்களை  யாகம் வளர்த்து ,தலைவாழை இலை போட்டு நீத்தார் கடன் நிறைவு செய்தார். மேடைகளில் மட்டும் நாத்திகவாதம், சனாதனம் வேரறுப்போம் என்று பேசுவது தனது வீடுகளில் அனைத்து இந்து சமய பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது இரட்டை வேடம் ஆக தெரியவில்லையா?சரி நடிகர்கள்தான் நாம் என்ன செய்ய முடியும்! நாத்திகவாதம் வேரறும்போம் !

நான்மறை வழியில் வாழ்வு அமைப்போம்! நமது நெறிகள் போற்றிடுவோம்! படம்:கொடுமுடி காவிரிக்கரை அல்லது உஞ்சனூர் காவிரிக்கரையா ஆக இருக்கலாம் என இராம. இரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார். ஆமாம் இந்த புகைப்படத்திற்கு சத்யராஜ் என்ன கவிதை சொல்ல போகிறார்? இப்படி வசமாக சிக்குவதே சமீபத்தில் நாத்திகவாதிகளுக்கு வேலையாக போய்விட்டது!