Cinema

KPY பாலாவிற்கு நேர்ந்த கொடூரம்....

KPY BALA
KPY BALA

 பணம் நிறைய பேர் சம்பாதிக்கிறார்கள், ஆனால் அதனை மற்றவர்களுக்கு கொடுத்து மகிழும் மனது யாருக்கு இருக்கும்?? அதுவும் 30 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள் இப்படி உதவி செய்வதற்கென்று யாரும் இருக்கிறார்களா?? அப்படி இருந்தால் மிகவும் விசித்திரமான ஒன்றுதான்!! இன்றைய காலகட்டத்தில் உள்ள இளைஞர்கள் பெரும்பாலும் சினிமாவிற்கு செல்வது, செல்போன் வாங்குவது போன்ற செலவுகளை செய்வார்கள் ஆனால் மற்றவர்களுக்கு எந்த உதவியும் செய்யும் என்ன அவ்வளவோ இருக்காது. ஆனால் இதற்கு மாறாக ஒருவர் இருக்கின்றார்!! ஹர்ஷா ஃபார் யூ தெலுங்கு என்னும் youtube சேனல் தெலுங்கு மொழியில் இயங்கி வரும் பிரபலமான யூடியூப் சேனலில் ஒன்று. இதில் ஹர்ஷா சாய் என்ற ஒரு இளைஞர் தனது தந்தையின் எந்த ஒரு பணத்தையும் வாங்காமல் தானாக உழைத்து அதில் வரும் பணத்தை வைத்து கஷ்டப்படும் மக்களுக்கு உதவி வருவுகிறார். 


எத்தனையோ பேருக்கு பள்ளியில் கட்டணம் செலுத்தியுள்ளார். கஷ்டப்படும் மக்களின் இடத்திற்கு தேடி சென்று அவர்களுக்கு தெரியாதது போல் இயல்பாக அவர்களிடம் பேசி அதன் பின் பணத்தினை கொடுத்து அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். மேலும் நேரடியாக அவர்களிடம் என்ன கஷ்டம் உங்களுக்கு இருக்கிறது என்று கேட்டு, அவர்கள் கேட்கும் கோரிக்கைகளை நடத்தி வைத்து அவர்களை சந்தோஷ படுத்தி பார்ப்பார். இவ்வாறு ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்ற தத்துவத்திற்கு ஏற்ப பல உதவிகளை செய்து அவர்களின் சிரிப்பை பார்க்கும் இவரையும் கஷ்டப்படுபவர்கள் இறைவனாகவே பார்க்கின்றனர். எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் தனது உழைப்பினால் வரும் பணத்தை மட்டுமே பயன்படுத்தி அனைவருக்கும் உதவி வரும் இவரை போலவே தற்போது தமிழ்நாட்டிலும் ஒருவர் உருவாகி உள்ளார்!! அவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா???

தமிழில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் காமெடி சொற்களில் நடித்து வரும் ஒரு கலைஞர் கேபிஒய் பாலா. எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் பல சொற்களை நடித்து சின்ன சின்ன சேமிப்புகளை சேமித்து அதனை பயன்படுத்தி தனக்கென்று எதுவும் செலவிடாமல் பிறருக்கென பல உதவிகளை செய்து வருகிறார். பெரிய பெரிய நடிகர்கள் கூட செய்யாத உதவிகளை இவர் செய்து வருவதை பார்க்கும் போது மிகவும் வியப்பாகவே உள்ளது. இன்றைய உலகத்தில் சிறிய உதவி செய்தாலும் கூட இவர்கள் எதிர்காலத்தில் நமக்கு உதவுவார்கள் என்று நினைத்து செய்பவர்கள் தான் அதிகம்.  எந்த உதவியும் மற்றவர்களிடமிருந்து எதிர்பார்க்காமல் தங்களால் முடிந்த உதவியை செய்யும் கேபிஒய் பாலா போன்ற நபர்களை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

சமீபத்தில் கூட ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மழை நிவாரண உதவி செய்வது, பெட்ரோல் பங்க்ல் வேலை பார்க்கும் ஒருவருக்கு இரு சக்கர வாகனம் வாங்கி கொடுத்து மகிழ்விப்பது போன்ற பல உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். மேலும் பல உதவிகளை செய்ய வேண்டும் என்று நினைக்கும் பாலாவுக்கு தற்போது கஷ்டம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கே பி ஒய் பாலா தற்போது வரை எனக்கு வேறு எந்த பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பாலாவுக்கு தற்போது எந்த பட வாய்ப்பும் இல்லை என்று கேட்கும் போது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. தனது சம்பளத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தாலும் இவருக்கு எந்த உதவியும் செய்து பட வாய்ப்பு கொடுக்க யாரும் இல்லை என்று நினைக்கும் போது இதுவும் வருத்தமாக தான் உள்ளது என இணையத்தில் விமர்சனங்கள் பறக்கின்றது...