Cinema

இத்தனை நடந்தும் புகார் கொடுக்க விஜய் சேதுபதி அஞ்சுவதும் ஏன்? எழுத்தாளர் பரபரப்பு கருத்து?

vijay sethupathi
vijay sethupathi

நடிகர் விஜய் சேதுபதி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தமிழக ஊடகங்கள் வாய் திறக்காத நிலையில் சமூக ஊடகங்கள் அதனை தினமும் விவாத பொருளாக  உண்டாக்கியுள்ளன, இந்த நிலையில் விஜய் சேதுபதியை தாக்கிய மகாகாந்தி என்பவர்  விஜய் சேதுபதி நாடு குறித்தும் தேவர் குறித்தும் தவறாக பேசியதோடு என்னையும் அடித்தார் அதனால் நான் அடித்தேன் என தெரிவித்தார்.


இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் எதார்த்த விஷயங்கள் குறித்து மிக ஆழமாக தனது கருத்தை மாறுபட்ட பாணியில் மக்களுக்கு புரியும்படி எழுதிவரும் எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் விஜய் சேதுபதி தாக்கப்பட்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார் அதில். விசய் சேதுபதியினை நானே தாக்கினேன் என பகிரங்கமாக சொல்கின்றார் தேசியவாதி ஒருவர் ஆனால் புகார்கொடுக்க விசய் சேதுபதியார் அஞ்சுகின்றார், காரணம் புகார் கொடுத்தால் அவர் பேசிய தேசவிரோத பேச்சுக்கள் வெளிவரும், விருதும் பறிபோகும்

விசய் சேதுபதியாரின் இம்சைகள் எல்லை மீறுகின்றன‌ , அவர் சம்பாதிக்க இந்நாடு வேண்டும், அவர் உல்லாசமாய் வாழ இத்தேசம் வேண்டும், இவர் படம் நடிக்கவும் அதில் சம்பாதிக்கவும் இந்திய ராணுவம் எல்லையில் காவல் இருக்க வேண்டும், உளவுதுறையும் காவல் அமைப்புக்களும் நாட்டை காக்க வேண்டும்

இவரோ உல்லாசமாக நடித்துவிட்டு காசும் விருதும் குவிப்பார், குவித்துவிட்டு "இது நாடா" என்பார் , இந்த நாடு பிடிக்கவில்லை என்றால் அவர் ஆப்கன் முதல் அமெரிக்கா வரை செல்லட்டும், ஆனால் எந்த நாட்டில் கிழித்துவிடுவார் என பார்க்கலாம்"இந்தியா ஒரு நாடா?" என கேட்கும் அந்த மட சேதுபதி, என்ன மண்ணாங்கட்டிக்கு துபாயில் இருந்து நாடு திரும்பி நடிக்க வேண்டும், ஆப்ரிக்கா பக்கம் ஓடினால்தான் என்ன?

பசும்பொன் தேவர் அய்யா அவர்கள் சுத்தமான இந்து, பரிசுத்தமான இந்தியன் அவரை பற்றி பேச விசய் சேதுபதி எனும் மடையனுக்கு, அந்த தேசவிரொதிக்கு கொஞ்சமும் அருகதை இல்லை இன்னும் அவர் அப்படி பேசிதிரிந்தால் அவருக்கும் அவர் சினிமா வாழ்க்கைக்கும் அது நல்லதல்ல , விசய் சேதுபதியினை அடித்த நபரின் நடவடிக்கை பற்றி நாம் ஒன்றும் சொல்லவில்லை ஆனால் அவரின் தேசாபிமானத்தை நாம் வரவேற்கின்றோம்

தேசத்தை பற்றி தவறாக பேசும் எதிரிகளை மட்டுமல்ல உள்நாட்டு தேசவிரோதிகளையும் விட கூடாது, அவ்வகையில் நல்ல இந்தியனாக அவர் இருக்கின்றார், இந்தியா இன்னும் நிலையாக நிற்கின்றது என்றால் இம்மாதிரி தேசாபிமானிகளாலேதான்

அவரின் தேசபற்று வாழ்க, இப்படி கோடான கோடி தேசபக்தர்கள் இம்மண்ணில் உண்டு என்பதை உணர்ந்து "சகதிபதி"  தன் வாயினை அடக்குதல் நல்லது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விஜய் சேதுபதி இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பது சந்தேகத்தை அதிகரிக்கும் வண்ணமே உள்ளது .