Cinema

விஜய் சொன்ன குட்டி கதையால் .... பெரும் கடுப்பில் உள்ள ஆளும் கட்சி...!

vijay udhayanidhi stalin
vijay udhayanidhi stalin

 நடிகர் விஜய் படங்கள் என்றாலே சர்ச்சைகளும் அதை தொடர்ந்து அரசியலும் அரங்கேறுவது தொடர்கதையாக மாறி வரும் நிலையில் நேற்று விஜய் சொன்ன குட்டி கதை தற்போது உதயநிதி தரப்பை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தி இருக்கிறதுவிஜயின் லியோ படத்தை கூடுதல் காட்சிகளாக விநியோகம் செய்வதில் தொடங்கி பல பிரச்னைகளும், சிக்கல்களும் இருந்தது. படத்திற்கு ஆடியோ லாஞ்சிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்த நிலையில் லியோ ஆடியோ லான்ச் கேன்சல் செய்யட்டது.இதற்கிடையில் வெளியான லியோ திரைப்படம்  வரவேற்பைப் பெற்ற அதேசமயம் சில கலவையான விமர்சனங்களையும் பெற்றிருந்தது. இருப்பினும், பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததாகப் படக்குழுவும் அறிவித்திருந்ததஇவற்றையெல்லாம் தாண்டி லியோவில் விஜய் ரசிகர்கள் மிஸ் செய்த ஒரே விசயம் ஆடியோ லாஞ்ச்சும், விஜய்யின் குட்டி ஸ்டோரியையும்தான். 


நேற்று நடந்த வெற்றி விழாவில் விஜய் வழக்கம்போல தன் குட்டி ஸ்டோரியை சொல்லத் தொடங்கினார். ஒரு காட்டுக்கு ரெண்டு பேர் வேட்டைக்கு போறாங்க... அந்த காட்டுல காக்க கழுகு... முயல், மான்... காட்டுல இதெல்லாம் இருக்கும் தான அதுக்கு சொன்னேன் பா!. அது மாதிரி இந்தக் காட்டுக்கு வேட்டைக்கு போறாங்க ஒருத்தர் வில் அம்பு. இன்னொரு நபர் ஈட்டி, வேல் வச்சுருக்கிறவர் முயலை குறி வைக்கிறார். இன்னொருத்தர் யானையைக் குறி வைக்கிறார்.இதுல யார் மாஸ் தெரியுமா.. யானைக்கு குறி வச்சவர் தான் மாஸ். கைக்குக் கிடைக்கிறது இல்லமா பெருசா குறி வச்சிருக்கார்ல. அது மாதிரித்தான் உயரிய விஷயங்களுக்கு ஆசைப்படணும்.ஆசைகள் கனவுகள் இதுல என்ன தவறுகள்.

வீட்டுல குட்டி பையன் அப்பாவோட உடையை போட்டுக்குவான். அப்பாவோட வாட்ச் எடுத்து கட்டிப்பான், அப்பாவோட நாற்காலியில் உட்கார பார்ப்பான் அப்பா சட்டை பெருசு. அப்பா மாதிரி ஆகணும்னு கனவு காண்கிறான் அது என்ன தவறு என்று கேட்டார் விஜய்.மேலும் பாட்டு ரிலீஸ் ஆகி ரெண்டு லைன் கட் ஆச்சு... விரல் இடுக்குலன்னு ஒரு வரி.. அதை ஏன் சிகரெட்டுன்னு நினைக்கிறீங்க... அது தீர்ப்பை மாத்தி எழுதுற பேனாவாக கூட இருக்கலாம்... அண்டால குடுக்கிறது கூழாகக் கூட இருக்கலாம். இது மாதிரி மழுப்பல் பதில் நான் சொல்லலாம்.ஆனா சினிமாவை சினிமாவா பாருங்க. ஒரு நெகடிவ் கதாபாத்திரத்திற்குத் தேவையான விஷயங்களைத்தான் வச்சாங்க. அதெல்லாம் நீங்க எடுத்துக்க மாட்டீங்கனு தெரியும். ஸ்கூல், காலேஜ் பக்கத்துல தான் ஒயின் ஷாப் இருக்கு.. அவுங்க என்ன அடிச்சுட்டு போறாங்களா... அவங்கல்லாம் ரொம்ப தெளிவு... என் படம் நல்லா இல்லைன்னா நல்ல இல்லைன்னு சொல்லிட்டு போயிடறாங்க... உங்கள்ல பலர் சொல்லாமையே பல விஷயங்கள் செய்றீங்க...

' சரவணன் வடபழனில போகுறப்போ ஒருத்தவங்களுக்கு உதவி பண்ணயிருக்காங்க... அப்போ அவுங்க நன்றி 'எம்ஜிஆர்' ன்னு சொன்னாங்களாம்.... யார் உதவு பண்ணாலும் அது 'எம்ஜிஆர்' பண்ணினதுன்னு நினைச்சுடறாங்க. எனக்கு ஒரு ஆசை வருங்காலத்துல இது மாதிரி உதவி பண்றது நம்ம பசங்க தான்னு சொல்லணும்" என்றார்இதில் முதலில் சொன்ன குட்டி கதை ரஜினி சொன்ன காக்கை கதைக்கு பதிலடியாக அமைந்த நிலையில் அடுத்து சொன்ன அப்பா மகன் சட்டை கதை முழுக்க முழுக்க ஸ்டாலின் உதயநிதியை குறிவைத்து சொன்ன கதையாக பார்க்க படுகிறது.

அப்பா மாதிரியே வாட்ச், நாற்காலி என விஜய் கூறியது தமிழக அரசியலில் பற்றி எறிந்த வாட்ச் விஷயத்தை நினைவு கூறும் விதமாக இருந்த காரணத்தாலும் விஜயை மைய படுத்தி arasiyal🙏🏼குறித்து அர்ஜுன் பேசிய கருத்துக்களும், நீங்கள் ஆணையிடுங்கள் ஒரே தளபதியாக இருந்து நான் முடிக்கிறேன் என விஜய் பேசிய அரசியல் கருத்துக்கள் முழுக்க முழுக்க உதயநிதிக்கு எதிரான அரசியல் கருத்துக்களாக பார்க்க படுகிறது.மொத்தத்தில் இனி வரும் நாட்களில் விஜய் அரசியலுக்கு வரும் பட்சத்தில் திமுகவின் பிரதான வாக்கு வங்கியான கிறிஸ்தவர்கள் வாக்கு வங்கி முழுக்க முழுக்க விஜய் பக்கம் செல்லும் என்பதால் ஆளும் திமுக இப்போதே விஜயை எதிர் கொள்ள தயாராகிவிட்டதாம். ஆளும் கட்சியை எதிர்த்தால் இனி வரும் நாட்களில் விஜய் படம் சுமுகமாக வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது.!