Cinema

காவிரி விவகாரம் நடிகர்களை பங்கமாக கலாய்த்த ...பிரபல யூடுப்பர்!

cinema
cinema

கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீர் பிரச்சனைக்கு  குரல் கொடுக்காத தமிழ் முன்னணி நடிகர்களை நாக்கை பிடுங்கும் விதமாக எக்ஸ் (டுவிட்டர்) தளத்தில் கலாய்த்து தள்ளியுள்ளார் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்.காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தர மறுத்தது. இப்படி பட்ட சூழலில் கடந்த மாதம் 26ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழகத்திற்கு அடுத்த 15 நாடுகளுக்கு 3000 ஆயிரம் கன அடி வீதம் நீரை திறந்து விட கர்நாடக மாநிலத்திற்கு ஆணையம்  உத்தரவிட்டது. இதற்கு கர்நாடக அரசு மற்றும் கர்நாடக அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 29ம் தேதி மாநிலம் முழுவதும் முழுஅடைப்பு போராட்டம், பந்த ஆகியவைகளில் ஈடுபட்டனர். அன்று அந்த மாநிலத்திற்கு இரவு 11:59 மணி வரை 144 தடை விதிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமில்லாமல் காவிரி பிரச்னை என்றால் கர்நாடகாவிற்கு ஆதரவாக வாட்டாள் நாகராஜ் முதல் ஆளாக குரலை எழுப்புவார்.


தற்போது நடைபெற்ற போராட்டத்திலும் இவர் கலந்து கொண்டு கர்நாடகாவில் வாழும் தமிழர்களை அவமதிக்கும் வகையிலும், தமிழ் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். முன்னதாக தமிழ் நடிகர் சித்தார்த் "சித்தா" படத்தின் புரமோஷனுக்காக பெங்களூரு சென்றிந்தார். அந்த விழாவின் நடுவில் புகுந்த கர்நாடக அமைப்பினர் தமிழ் பட நடிகர் இங்கு ப்ரோமோஷன் செய்யக்கூடாது என்று கோசம் எழுப்பி அவரை பாதியில் வெளியேற்றினர். இப்படி சித்தார்த் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் தளத்தில் "காவேரி நம்முடையதுதான் என கன்னடத்தில் பதிவிட்ட அவர், பல தசாப்தங்களாக இருக்கும் பிரச்சனையில் அரசியல்வாதிகளை விடுத்து சாமானியர்களை  துன்புறுத்துவதா? கர்நாடக மக்கள் சார்பாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் சித்தார்த் என பதிவிட்டு இருந்தார்". தொடர்ந்து கன்னட நடிகர் சிவராஜ்குமார் போராட்டத்தின் போது மன்னிப்பு கோரியிருந்தார். 

இதற்கிடையில் கன்னட நடிகர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது அத்தவறை தெரிவித்தனர். இந்நிலையில் தமிழ் நடிகர் குரல் கொடுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது. தமிழ் நடிகர்களுக்கு தேவையானது பணம், மக்களிடம் திரையில் பிரபலமாக வேண்டும். ஆனால் பொது பிரச்சகனைகளுக்கு குரல் கொடுக்க மாட்டார்கள் என சமூக தளத்தில் நெட்டிசன்கள் கருத்துக்களை தொடங்கினர். நேற்று தமிழ் பட திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது டுவிட்டர் (எக்ஸ்) பக்கத்தில் காவிரி பிரச்சனை குறித்து குரல் எழுப்பாத தமிழ் முன்னணி நடிகர்களை விமர்சித்து பதிவிட்டார். அதில் "தளபதி விஜயின் தலைவா புகைப்படத்தை பதிவிட்டு காவிரி பிரச்னை தலைவா டைம் டூ மியூட் என்ற வசனத்தையும் குறிப்பிட்டுள்ளார். அடைத்ததாக நடக்கற சூர்யா-வின் எதற்கும் துணிந்தவன் படத்தின் புகைப்படத்தை பதிவிட்டு காவிரி பிரச்னை சூர்யா - இதற்கு மட்டும் துணியாதவன் என விமர்சித்துள்ளார்". தெடர்ந்து இதே போல் உலகநாயகன் கமல் ஹாசன், சத்யராஜ், விஷால், கார்த்திக், தனுஷ், சமுத்திரக்கனி ஆகியோரையும் விமர்சித்து பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..