Cinema

இதுவரை யாரிடமும் சொல்லாத ரகசியத்தை சொல்கிறேன் சூர்யா குடும்பம் குறித்து ஜான் பாண்டியன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

john pandiyan
john pandiyan

நடிகர் சூர்யா ஜெய் பீம் திரைப்படத்தில் பழங்குடியின இருளர் மக்களை காப்பாற்ற வந்த வழக்கறிஞராக நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள், ஆதரவுகள் என வந்து கொண்டு இருக்கும் சூழலில் தற்போது ஜான் பாண்டியன் சூர்யாவின் தந்தை மற்றும் அவரது செயல்பாடுகள் குறித்து வெளியிட்ட தகவல்கள் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.


ஒரு முறை கோவையில் இருந்து விமானத்தில் வந்தபோது சிவகுமார், சூர்யா ஆகியோர் நான் இருந்த இருக்கைக்கு அருகில் இருந்தனர், அப்போது எனக்கு சிவகுமார் மீது நல்ல மதிப்பு இருந்தது, அருகில் நலம் விசாரித்தேன், அப்போது சூர்யா உடன் சிலர் போட்டோ எடுக்க முயன்றனர், அதை பார்த்து சிவகுமார் என்னிடம் கூறினார், நீங்கள் சூர்யாவுடன் போட்டோ எடுக்க கூடாது என என்னிடம் கூறினார்.

எனக்கு அப்படியே ஷாக் ஆகிவிட்டது, என்னிடம் லட்சம் பேர் போட்டோ எடுக்க நிற்கிறான் நான் ஏன் அவரிடம் எடுக்க போகிறேன், சுத்தமான ஜாதி வெறி சிவகுமாருக்கு உள்ளது, அப்படிபட்ட குடும்பத்தினர்தான் சிவகுமார் சூர்யா குடும்பத்தினர் எனவும், இதுவரை யாரிடமும் சொல்லாத விஷயத்தை முதல் முறையாக சொல்வதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார் ஜான் பாண்டியன்.

இதே சிவகுமார் தான் சில நாட்களுக்கு கோவிலை கட்டிய கொத்தனார், ஆசாரி போன்றோர் கோவிலுக்குள் போக முடியாது கோவிலில் தீண்டாமை உள்ளது என பேசியவர், தற்போது ஜான் பாண்டியன் வெளியிட்ட தகவல் மூலம் சிவகுமார் குடும்பத்தின் உண்மையான சுயரூபம் வெளிவந்தது என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

திரைப்படத்தில் நாயகனாக ஏழை, தலித் மக்களை காப்பது போன்று நடிக்கும் நடிகர்கள் பலர் உள்ளக்குள் வன்மத்தை வைத்து கொண்டு வெளிவேஷம் போடுகின்றனர் என இந்த காணொளியை சுட்டிக்காட்டி இன்பமுதன் என்பவர் குறிப்பிட்டுள்ளார்,வேதனையுடன் ஜான் பாண்டியன் பேசிய வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்.