Cinema

சிக்கிய சீரியல் பிரபலம்! இவ்வளவு மோசமான வேலை நடந்திருக்கிறதா?

rahul ravi
rahul ravi

இன்றைய காலகட்டத்தில் உள்ள இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கம் மேலோங்கி உள்ளது அதனால் அதை அடைவதற்காக சின்னத்திரை வெள்ளித்திரை மாடலிங் என்ற பல வழிகளில் தங்களது முயற்சிகளை மேற்கொள்கின்றனர். முன்பெல்லாம் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வருபவர்கள் மிகவும் குறைவாக இருந்தனர் ஆனால் வெள்ளி திரையிலிருந்து சின்னத்திரைக்கு வருபவர்கள் ஏராளமாக இருந்தனர், அதுவே தற்போது தலைகீழாக மாறி உள்ளது! இளைய சமுதாயத்தினர் பெரும்பாலும் தங்களை மாடலின் வழியிலும் சின்னத்திரை வழியிலும் ஈடுபடுத்திக் கொள்கின்றனர். அப்படி சின்னத்திரை மூலமாக பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையிலும் துணை நடிகர் கேரக்டரை தாங்கி நடத்திக் கொண்டிருக்கும் ஒரு நடிகர் ராகுல் ரவி. இவரின் பெயர் பெரும்பாலானவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் இவர் நடித்த சில சீரியல் பெயர்களை கூறினால் இவரா என்று சட்டென்று அனைவருக்கும் பிடிபடுவார்.


அதாவது தமிழில் முதல்முறையாக நந்தினி என்ற சீரியல் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் ராகுல் ரவி அதற்கு பிறகு தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே, சாக்லேட், அன்பே வா என்ற சில முக்கிய சீரியல்களில் நடித்தவர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் கேரள மாநிலத்திலேயே மாடலாக இருந்தார் அதற்குப் பிறகு இவருக்கு கிடைத்த சின்னத்திரை வாய்ப்புகளால் மலையாளத்தில் வெளியான பொன்னம்பளி என்ற சீரியலில் முதல் முறையாக தனது சின்னத்திரை வாழ்க்கையை ஆரம்பித்தார். அதற்குப் பிறகு 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் தமிழ் மற்றும் கன்னடம் என்ற இரண்டு மொழிகளில் ஒளிபரப்பான நந்தினி என்ற சீரியல் மூலமாக பெரும்பாலான ரசிகர்களை பெற்றார். இதற்குப் பிறகு அவருக்கு கிடைத்த சீரியல்களே சாக்லேட், கண்ணான கண்ணே. அதனைத் தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளிலும் சின்ன திரையில் நடித்த வந்தார். இதற்கிடையில் வெள்ளி திரைகளும் துணை நடிகர் கதாபாத்திரம் இவரை தேடி வந்தது அதிலும் நடித்து புகழ்பெற்றார்.

இப்படி தனது திரை வாழ்க்கையில் புகழை நோக்கி சென்று கொண்டிருந்த ராகுல் ரவிக்கு 2020இல் திருமணம் நடைபெற்றது இந்த திருமணம் காதல் திருமணமாக கூறப்படுகிறது. ராகுல் ரவியின் மனைவி பெயர் லட்சுமி நாயர். திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் மகிழ்ச்சியாக இருந்த இந்த தம்பதி தற்போது ஒரு புதிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. அதாவது ராகுல் ரவியின் மனைவி லட்சுமி நாயர் தனது கணவர் மீது புகார் அளித்துள்ளார் அதுவும் அவர் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்று குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இந்த குற்றச்சாட்டை காவல்துறையினமும் அளித்து காவல்துறையினர் இது குறித்த விசாரணையிலும் இறங்கியுள்ளனர். அதாவது ராகுல் ரவிக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பில் இருப்பது லட்சுமிக்கு அவரது நண்பர்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து லட்சுமி தனது கணவரிடம் இது குறித்து கேட்டுள்ளார் அதற்கு ராகுல் ரவி லட்சுமியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

அதற்குப் பிறகே காவல்துறையினரை தனது வசிக்கும் இடத்திற்கு அழைத்து வந்து தனது கணவர் செய்யும் தவறுகளை வெளிச்சம் போட்டு காட்டினார் லட்சுமி. இதனை அடுத்து காவல்துறையினர் பதிவு செய்த எஃப் ஐ ஆர் ஐ நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது அதற்கு முன்பாகவே ராகுல் ரவி இவ்வழக்கில் இருந்து வெளிவதற்கு முன்ஜாமீன் கோரி உள்ளார், அந்த முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் ரத்து செய்யததை அடுத்து ராகுல் ரவி தலைமறைவானார். இருப்பினும் அவரைக் கண்டதும் பிடிக்க வேண்டும் என்ற வகையில் நீதிமன்றம் லுக் அவுட் நோட்டீசை அனுப்பியுள்ளது. இது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவுகிறது மேலும் சீரியலில் கதாநாயகனாக நல்ல குணங்களையும் உடல் அமைப்பையும் பெற்றுக் கொண்டு இருக்கும் ராகுல் ரவிக்கு இப்படி ஒரு உண்மை கதையா கதையில் மட்டும்தான் இவர் ஹீரோவா நிஜத்தில் வில்லனாக இருக்கிறார் என்று விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது