Cinema

நிருபரை பாராட்டும் மக்கள்..! "செருப்பால்".... அடிப்பேன்... நடிகர் மயில்சாமி அதிரடி...!

actor mayilsamy
actor mayilsamy

ஒரு பொறுப்புள்ள ரிப்போர்டர் எழுப்பிய கேள்வியால் ஆவேசமான நடிகர் மயில்சாமி பேசிய கருத்துக்கள் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது, திமுக எம்.பி ஆ.ராசா இந்துக்கள் குறித்து சர்ச்சையாக பேசிய கருத்துக்கள் கடும் அதிர்வலைகளை உண்டாக்கி வருகிறது.


சமூக வலைத்தளங்களில் நாளுக்கு நாள் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன,பலரும் ராசாவின் பேச்சினை கண்டித்து வரும் சூழலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் மயில்சாமி, வழக்கமாக மயில்சாமி பாஜகவிற்கு எதிராக கருத்துக்களை சரளமாக பேசுவார் ஆனால் இன்று பொறுப்புள்ள நிருபர் எழுப்பிய கேள்வியால் வாயை கட்டுப்படுத்த முடியாமல் எந்த மதத்தை எவன் வேண்டாம் என்று சொன்னாலும் செருப்பால் அடிப்பேன் என ஆவேசமாக பேசிவிட்டு நகர்ந்தார் மயில்சாமி.

இன்று செய்தியாளர்களை சந்தித்த மயில்சாமியிடம் திமுக எம்.பி ராசா இந்துக்களை அவதூறாக பேசி இருக்கிறாரே என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார் அதற்கு மயில்சாமி தான் அரசியல் பேச விரும்பவில்லை என தப்பிக்க பார்த்தார் விடாத நிருபர் நீங்கள் தேர்தலில் நின்றீர்கள் என கேட்க நான் வெற்றி பெற தேர்தலில் நிற்கவில்லை, கூட்டணிகள் சரியில்லாத காரணத்தால் அவற்றை எதிர்த்து நின்றேன் என கூறி மழுப்பினார்.

விடாத அதே நிருபர் நபிகள் குறித்து பேசினால் எல்லாரும் எதிர்ப்பு தெரிவிக்கும் போது ஏன் இந்து மதம் குறித்து பேசினால் வாய் திறக்க மறுக்கிறீர்கள் என மீண்டும் ஒரே போடாக போட்டார், இனியும் பதில் சொல்லவில்லை என்றால் தவறாக போகிவிடும் என்று யோசித்த மயில்சாமி எனது உடலே இந்து முஸ்லீம் கிறிஸ்தவ மதத்தால் ஆனது எந்த மதத்தை எவன் வேண்டாம் என்றாலும் செருப்பால் அடிப்பேன் என அதிரடியாக தெரிவித்தார்.

பொறுப்புள்ள நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்வியால் மயில்சாமி ஆவேசமாக தனது எதிர்ப்பை பதிவு செய்யும் சூழலுக்கு சென்றுள்ளது இதே போன்று மற்ற நிருபர்களும் கேள்வி எழுப்பினால் விரைவில் தமிழகத்தில் எந்த மதத்தையும் யாரும் தவறாக பேச இயலாத சூழல் உண்டாகும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.