Cinema

இளம் தலைமுறையை கட்டி ஆளும் தலைவனுக்கு......பிறந்தநாள் வாழ்த்து!

aniruth
aniruth

பிரபல இசையமைப்பாளர் அனிருத்  ரவிச்சந்தர் இன்று தனது 33வது றந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். தமிழ் சினிமாவில் தற்போது கலக்கி வரும் இசையமைப்பாளர் வரிசையில் டாப் இடத்தில இடம் பெற்றியிருப்பவர் அனிருத் ரவிச்சந்தர். சினிமாவை அடிப்படையாகக் கொண்டு விளங்கிய குடும்பத்திலிருந்து வந்தவர் தான் இந்த அனிருத். இவருடைய தந்தை ரவி ராகவேந்தர் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் ஆவார். விசுவின் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். சுலபமாக சினிமா துறையில் நுழைய வாய்ப்பு இருந்தாலும். அவ்வளவு எளிதில் அனிருத் சினிமா துறையில் வரமுடியவில்லை பல இன்னல்களை கண்டது தற்போது கலக்கி வருகிறார்.


தனுஷின் 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தனுஷின் 'வை திஸ் கொலவெறி டி' என்ற வைரல் பாடல் மூலம் ஒரே இரவில் உலகம் முழுவதும் தெரியவந்தார். இந்த பாடல் யூடியூப்பில் 400 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. அதன் பின் முன்னணி ஹீரோவுக்கும் இசையமைக்க தொடங்கினார். முதலில் தளபதி விஜயின் கத்தி படத்திற்கு இசையமைத்து அனைத்து பாடலும் ஹிட் அடிக்க, தொடர்ந்து அனிருத் பெயர் மக்களிடம் பாராவை தொடங்கியது. தமிழ் படம் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்று பல்வேறு மொழிகளில் பிரபலமாக ஆரம்பித்தார். விஜய் படம் என்றாலே அனிருத் தான் இசையமைப்பாளர் என்ற பெயர் கிடைக்க ஆரம்பித்தது. தொடக்கத்தில் கஷ்டப்பட்டு திரை உலகிற்கு வந்தாலும் இப்போது எல்லோரும் திரும்பி பார்க்கும் விதத்தில் பிரபலமாகி விட்டார்.

அனிருத் மூன்று பிலிம்பேர் விருதுகள், ஒன்பது SIIMA விருதுகள், ஆறு எடிசன் விருதுகள் மற்றும் ஐந்து விஜய் விருதுகளை வென்றுள்ளார்.அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வெளியான ஜவான் திரைப்படத்திற்கு இசையமைத்து பாலிவுட்டிலும் தனது தடத்தை பதித்துள்ளார் அனிருத். இன்றைய தலைமுறை இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய இசைப் புரட்சியை ஏற்படுத்தி உள்ளார் என்று கூறினால் அது மிகையாகாது. ஜெயிலர் படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு இணையாக பாடல்களை கொடுத்திருந்தார். இவரின் இசையின் மூலம் பல இயக்குனர்கள் மக்கள் மத்தியில் தெரியவந்து இருகிறார்கள். இவரின் பயணம் தொடர்ந்து நிலைத்து வரும் நிலையில், தற்போது விஜயின் லியோ படத்தில் இசையை கான ரசிகரக்ள் ஆவலுடன் இருக்கின்றனர்.இதனிடையே அனிருத் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பிறந்தநாள் ட்ரீட்டாக லியோ படத்தின் அப்டேட் அவர் கொடுக்க உள்ளார். இந்த சூழலில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அனிருத்தின் சொத்து மதிப்பு தகவல் பலரையும் ஷாக் அடையச் செய்துள்ளது. ஏனெனில் அவருக்கு மொத்தம் 50 கோடி ரூபாயிலிருந்து 60 கோடி ரூபாய்வரை சொத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. அத்துடன் இவர் ஒரு படத்துக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவரிடம் பிஎம்டபிள்யூ, போர்ஷ் என பல சொகுசு கார்களும் உள்ளன. 33வயதில் பல கோடி மதிப்பில் சொத்து வைத்திருப்பது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அனிருத் ராக்ஸ்டாருக்கு நமது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.